சிறுமியை கற்பழித்துக் கொன்றவருக்கு தூக்கு
வேலூர்:
வேலூர் அருகே சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் கொணவட்டம் கபூர் சாகிப் தெரு காளகோடி வீதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ்.இவரது மகள் ரஷிதா (5) துவக்கப்பள்ளியில் படித்து வந்தாள்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் லாலு என்ற லத்தீப் பாய் (40). இவர் கடையில் கூலிவேலை செய்து வந்தார். கடந்த 1999-ம் ஆண்டு ரம்ஜான் தினத்தன்று ரஷிதாவைசைக்கிளில் கடத்திச் சென்று கற்பழித்தார். பின்னர் அந்த சிறுமியை கிணற்றில் வீசிக்கொலை செய்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை செய்து லத்தீப் பாஷாவை கைது செய்தனர். அவர்மீது வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி தேவதாஸ், சிறுமியை கடத்தியகுற்றத்திற்காக 3 ஆண்டு சிறையும், கற்பழித்ததற்காக ஆயுள் தண்டனையும், குற்றத்தைமறைத்ததற்காக 2 ஆண்டு சிறையும், கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பு கூறினார்.












Click it and Unblock the Notifications