மேட்ச் பிக்ஸிங்: இந்தியா வருகிறது ஐ.சி.சி. குழு
லண்டன்:
மேட்ச் பிக்ஸிங் குறித்து வெளியாகியுள்ள சிபிஐயின் விசாரணை அறிக்கை பற்றி மேல்விசாரணை நடத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அதிகாரிகள்இந்தியா வரவுள்ளனர்.
லண்டன் போலீஸ் துறையின் முன்னாள் தலைவர் பால் கான்டன் தலைமையில்ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தியாவுக்குச்செல்வார்கள் என்று ஐ.சி.சி. புதன்கிழமை தெரிவித்தது.
மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தியது. இந்தவிசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 5கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 7 கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச்பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இக் குற்றச்சாட்டுகள் குறித்து மேல் விசாரணை நடத்துவதற்காக ஐ.சி.சி.யின்அதிகாரிகள் இந்தியா வருகின்றனர். விசாரணை அறிக்கை குறித்து இந்தியஅதிகாரிகளுடன் ஐ.சி.சி. அதிகாரிகள் முழுமையான ஆலோசனை நடத்துவார்கள்.