விமானத் தாக்குதலில் 40 விடுதலைப்புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை திரிகோணமலைப் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில்40 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
திரிகோணமலையில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது இலங்கைவிமானப்படையின் மிக் - 27 ரக போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்திவருகின்றன. இதில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில்,திரிகோணமலைப் பகுதிககு தெற்கே அமைந்துள்ள புலிகள் முகாம் மீது ராணுவவிமானங்கள் நடத்திய தாக்குதலில் 40 புலிகள் கொல்லப்பட்டனர்.
இரணை இலுப்பைக்குளம் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் இறந்தார்.வவுனியாவில தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
புலிகள் தரப்பில் விமானப்படை தாக்குதலில் இறந்தவர்கள் குறித்து எந்த தகவலும்வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications