எங்கள் அணியே பலமானது.. கூறுகிறார் நல்லகண்ணு
ஓசூர்:
தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு இல்லை. எங்களது அணியேபலமானதாக இருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
மக்கள் கோரிக்கை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நல்லகண்ணு தர்மபுரி மாவட்டம்தேன்கனிக்கோட்டைக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோதுகூறியதாவது:
இதுவரை எங்கள் கட்சியின் சார்பில் அரசியல் மாநாடுகள் நடத்தி வந்தோம். இனிமக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து மாநாடுகள்நடத்தவிருக்கிறோம்.
தி.மு.க. அரசின் பல நல்ல கொள்கைகள் இடைத்தரகர்கள் தலையீட்டால்நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கையால் சிறு தொழில்கள் நலிவடைந்துவிட்டன. மேலும் 1,249 தொழில்களுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுவிட்டது.இற்க்குமதி வரி குறைக்கப்பட்டுவிட்டது.
கேரளாவில் செய்வது போல் தமிழகத்திலும் கொப்பரைத் தேங்காய் கொள்முதல்நிறுத்தப்பட்டு முழுத் தேங்காய் கொள் முதல் செய்யப்பட வேண்டும்.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய 300 கோடிநிலுவைத் தொகையில் 20 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மீதித் தொகைஉடனே கொடுக்கப்பட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலில் எங்கள் கூட்டணி பலத்துடன் செயல்பட்டு வருகிறது. த.மா.கா.வும் எங்கள்கூட்டணி.யில் நீடிக்கிறது. ஏதேனும் பிரச்சனை வந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வோம்.எங்கள் கூட்டணியை முறிக்க பாரதீய ஜனதா கட்சி செய்யும் முயற்சிகள் பலிக்காது.
பாட்டாளி மக்கள் கட்சி எங்கள் கூட்டணியில் சேருமா என்பது குறித்துபொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால், முதல் நாள் கூறியதை மறுநாளே அவர் மறுத்துப் பேசி வருகிறார்.
தமிழகத்திற்கு இரண்டு அணிகள் போதும். மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லைஎன அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications