ஜெ.வுக்காக இலவச கச்சேரி .. ஏ.ஆர்.ரஹ்மான் சாட்சியம்
சென்னை:
ஜெயலலிதா மீது நடந்துவரும் சொத்து குவிப்பு வழக்கில் இசையமைப்பாளர் ரகுமான்புதன்கிழமையன்று சாட்சியம் அளித்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது வருமானத்திற்குஅதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு நடந்து வருகிறது. இதில் அரசு சார்பில்250-க்கும் மேற்பட்டோர் மீது விசாரணை நடந்துள்ளது. இந்நிலையில்இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புதன்கிழமை சாட்சியம் அளித்தார்.
சாட்சியத்தில், மரியாதை நிமித்தமாகத்தான் சுதாகரன் திருமணத்தில் இசை நிகழ்ச்சிநடத்தினேன். இந்த நிகழ்ச்சிக்கு நான் பணண் வாங்கவில்லை. திருமணத்திற்கு இசைநிகழ்ச்சி நடத்தும்படி என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
சுதாகரனின் மணப்பெண் வீட்டார் கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மீதுஎனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உண்டு. சுதாகரன் என்னை நேரில் வந்துதிருமணத்திற்கு அழைக்கவில்லை.
திருமண அழைப்பிதழ் தரும்போது தந்த பட்டுச் சேலைகள், வெள்ளித் தட்டுபோன்றவற்றை ஜெயலலிதா நேரடியாக தரவில்லை. இவற்றை போலீசார் விசாரணைசெய்யும்வரை உபயோகப்படுத்தவில்லை.
வக்கீல்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு நினைவில்லை, ஞாபகம் இல்லைஎன்றே ரஹ்மான் பதிலளித்தார்.
முன்னதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள நிதி நிறுவன அதிபர் மோகன்தாஸ் கடந்த மேமாதம் அளித்த சாட்சியத்தில் முதல்வர் ஆவதற்கு முன் ஜெயலலிதா தங்கள்நிறுவனத்தில் 1 லட்சம் வீதம் 3 டெபாசிட்டுகள் செய்திருந்தார். அதற்கான வட்டியாக 1லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படட்து என்றும், டெபாசிட் தொகைதங்களிடம்தான் இருக்கிறது என கூறியிருந்தார்.
அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றபோது ஜெயலலிதாவின் வக்கீல்மோகன்தாஸ் நீதிபதி உத்தரவிட்டும் அந்தப் பணத்தைக் கட்டவில்லை, நீதிமன்றத்தைமதிக்கவில்லை என கூறினார்.
அதற்கு அரசு வக்கீல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் நீதிமன்றத்தைமதிக்கவில்லை எனக் கூறியதைத் தொடர்ந்து இரு வக்கீல்களும் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications