மத்திய பிரதேசத்தின் பெருமையைத் தட்டிப் பறித்த ராஜஸ்தான்
ஜெய்ப்பூர்:
மத்திய பிரதேச மாநிலம் இதுவரை வைத்துக் கொண்டிருந்த கெளரவம், 26-வதுஇந்திய மாநிலமாக சட்டீஸ்கர் உருவான அடுத்த நிமிடமே பறிபோய் விட்டது.
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக இதுவரை மத்திய பிரதேசம் இருந்தது. ஆனால்இப்போது அந்த பெருமை மத்திய பிரதேசத்திடமிருந்து, ராஜஸ்தானுக்குப் போய்விட்டது.
நிலப்பரப்பில் மிகப் பெரிய மாநிலமாக ராஜஸ்தான் மாறியுள்ளது. முன்பு மத்தியபிரதேசத்தின் நிலப்பரப்பு 4.43 லட்சம் சதுர கிலோமீட்டராக இருந்தது. இப்போதுசட்டீஸ்கர் உருவாகி விட்டதால், ம.பி. மாநில பரப்பளவு 3.08 சதுர கிலோமீட்டராககுறைந்து விட்டது.
ராஜஸ்தான் மாநில பரப்பளவு, 3.42 சதுர கிலோமீட்டர் ஆகும். இதன் மூலம்இந்தியாவிலேயே பரப்பளவில் மிகப் பெரிய மாநிலமாக ராஜஸ்தான் மாறியுள்ளது.மத்திய பிரதேசம் 2-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
புதிய மாநிலமான சட்டீஸ்கரின் பரப்பளவு 1.35 சதுர கிலோமீட்டராகும்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications