ஊழல் மூதாட்டி ஜெயலலிதா.. பாய்கிறார் ராஜாராம்
சென்னை:
எங்களை வயதானவர்கள் என்று மூதாட்டி ஜெயலலிதா கூறுவது வேடிக்கையாகஇருக்கிறது என புரட்சித்தலைவர் அ.தி.மு.க. கட்சித் தலைவர் க.ராசாராம்கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
எங்களை வயதானவர்கள் என மூதாட்டி ஜெயலலிதா கூறுகிறார். ஜெயலலிதாவைப்போல் நாங்கள் சினிமா நடிகர்கள் அல்ல, வயதைக் குறைத்து சொல்ல.
நானும், எஸ்.டி சோமசுந்தரமும் சேர்ந்து ஒரு வயோதிகர்கள் சஙகத்தைத்தொடங்கியிருப்பதாக ஜெயலலிதா கேலி செய்துள்ளார். அவருக்கு சரித்திரமேதெரியாது. மூதறிஞர் ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோதும், சென்னைராசதானியை பிரதமராக இருந்து ஆண்ட போதும் அவருக்கு என்ன வயது என்பதைஜெயலலிதா எண்ணிப் பார்க்க வேண்டும்.
எங்களை வயோதிகர் என்று கூறும் ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவரைப் போல்நாங்களும் சினிமா நடிகர்கள் என்றால் வயதைக் குறைத்துச் சொல்லிபழகியிருப்போம்.
ஜெயலலிதா நாட்டை கொள்ளையடிக்காமல், நாணயமான, தன்னலமற்ற ஆட்சியைக்கொடுத்திருந்தால் நாங்கள் ஏன் இப்போது இந்த புதிய கட்சியை ஆரம்பிக்கப்போகிறோம். அதற்கு அவசியமே வந்திருக்காதே.
ஒரு ரூபாய் சம்பளத்தில் மகாபலிபுரம் வரை 30 பங்களாக்கள் கட்டிய மூதாட்டிஜெயலலிதா, இனிமேல் எங்களை வயோதிகர் என்று சொல்ல வேண்டாம். ஏனெனில்ஊழலில் உலக மகா அதிசயங்களைப் படைத்த அரசியல் மூதாட்டி ஜெயலலிதாதான்என்று ராசாராம் கூறியுள்ளார்.