பண்டார விளை படுகொலை: போலீஸ் மீது மனித உரிமை கமிஷன் புகார்
கொழும்பு:
மத்திய இலங்கையில், பண்டார விளை மறுவாழ்வு முகாமில் 26 தமிழர்கள்கொடூரமாக கொல்லப்பட்டபோது, அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக போலீஸார் மீது இலங்கை மனித உரிமை கமிஷன் புகார்கூறியுள்ளது.
பண்டாரவிளை படுகொலை குறித்து விசாரணை நடத்தி 18 பக்க அறிக்கையைகமிஷன் தயாரித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அக்டோபர் 25-ம் தேதி, சிங்களக் கும்பல் மறுவாழ்வு முகாமில் வெறியாட்டம்போட்டபோது, அதைத் தடுக்காமல் போலீஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
நூற்றுக்கணக்கான சிங்கள வன்முறைக் கும்பல் முகாமுக்குள் நுழைந்தபோது,அங்கிருந்த போலீஸாரால் அவர்களைத் தடுத்திருக்க முடியும். ஆனால் போலீஸார்அப்படிச் செய்யவில்லை.
வெறிக் கும்பல் கையில் பெரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை. வெறும் கத்திகள் மற்றும்பிற பொருட்களை மட்டுமே வைத்துக் கொண்டிருந்தனர். எனவே போலீஸாரால்அவர்களை எளிதில் தடுத்திருக்க முடியும். கும்பலைப் பார்த்து போலீஸார்பயப்பட்டதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம், அவர்களிடம்போதுமான ஆயுதங்கள் இருந்தன.
போலீஸார் மீது பெருமளவு தவறு இருந்தாலும் கூட முகாமில் இருந்த தமிழர்களில்ஒருவர் விடுதலைப் புலிகளுடன் நல்ல தொடர்பு வைத்திருந்ததாககவும் கூறப்படுகிறது.இதுகுறித்தும் அரசு விசாரணை நடத்த வேண்டும்.
முகாமி தங்கியிருந்தவர்களிடம் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆன்டன்ஜேம்ஸ் என்பவர் அடிக்கடி, தாங்கள் விடுவிக்கப்பட வேண்டும், எனவேபோராடுங்கள் என்று கூறி வந்ததாகத் தெரிகிறது. இதுவும் கூட வன்முறைக்குக்காரணமாக இருக்கலாம்.
முகாமில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள். அனைவருக்கும் 17 முதல் 35 வயதுக்குள் இருக்கும். தாங்களாகவேராணுவத்திடம் சரண் அடைந்தவர்கள். அவர்களுக்கு பல்வேறு மறுவாழ்வுப்பயிற்சிகள் முகாமில் அளிக்கப்பட்டு வந்தது.
நடந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற, நியாயமான, பொதுவான விசாரணைநடத்தப்பட வேண்டும். தவறு செய்த அதிகாரிகள், காவல்துறையினர் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications