இந்தியாவால்தான் தீர்வு காண முடியும் .. இலங்கை அமைச்சர்
கோயம்பத்தூர்:
இந்தியா தலையிட்டால் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும் என்றுஇலங்கை அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் ஆறுமுகம்தொண்டமான் கூறியுள்ளார்.
சுதந்திர வர்த்தக கழக சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிங்கப்பூர் செல்லும்வழியில் கோவை வந்த ஆறுமுகம் தொண்டமான், அங்கு செய்தியாளர்களிடம்பேசுகையில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியை நவம்பர்16-ம் தேதி சந்திக்கவுள்ளேன். அப்போது, இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில்தமிழகத்தின் பங்கு முக்கியமானது என்பதை எடுத்துரைப்பேன்.
நார்வே தூதுக் குழு தற்போது இப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்து வருகிறது.இருப்பினும் இதுவரை பலன் ஏதும் கிடைக்கவில்லை.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இலங்கை வந்திருந்தபோது,இலங்கையில் அமைதித் தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என்று எங்களது சிலோன்தொழிலாளர் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்தோம்.
பண்டாரவிளை மறுவாழ்வு முகாமில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்திட்டமிட்டு நடந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சந்திரசேகர் உள்பட 2 பேர்கைது செய்யப்படடுள்ளனர் என்றார் ஆறுமுகம் தொண்டமான்.
யு.என்.ஐ.