புதிய நிறுவனங்கள் பதிவில் தமிழகத்திற்கு 3-வது இடம்
டெல்லி:
இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை புதிதாக 2131 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
1956-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறுவனப் பதிவுச் சட்டத்தின்படி, இந்த ஆண்டு 2,131 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அரசு மற்றும்தனியார் நிறுவனங்கள் அடங்கும்.
கடந்த ஆண்டு 2,373 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 2,131 நிறுவனங்களில் 2,122 நிறுவனங்கள் தனியார்நிறுவனங்கள். இவற்றில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தனியார் நிறுவனங்களும் அடங்கும். 9 நிறுவனங்கள் கியாரன்டி நிறுவனங்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
200 பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ. 12,708 கோடி கேபிடல் நிதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து 508 நிறுவனங்களும், டெல்லியிலிருந்து 490 நிறுவனங்களும், தமிழ்நாட்டிலிருந்து 191 நிறுவனங்களும், ஆந்திராவிலிருந்து179 நிறுவனங்களும், கர்நாடகத்திலிருந்து 160 நிறுவனங்களும், குஜராத்திலிருந்து 151 நிறுவனங்களும், மேற்கு வங்கத்திலிருந்து 114 நிறுவனங்களும்பதிவு செய்யப்பட்டுள்ளன.
நிதி, ஆயுள்காப்பீடு, ரியல் எஸ்டேட் தொழில்களில் 799 நிறுவனங்களும், உற்பத்தி பிரிவில் 593 நிறுவனங்களும், மொத்த மற்றும் சில்லரைவியாபாரங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள் போன்ற தொழில்களில் 252 நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.