மதுரைக்கு வந்த பெங்களூர் சிறுமிகள் மீட்பு
பெங்களூர்:
பெங்களூர் ஸ்ரீராமபுரத்திலிருந்து காணாமல் போன மூன்று சிறுமிகள் வியாழக்கிழமைமதுரையில் கண்டு பிடிக்கப்பட்டனர்.
பெங்களூர் ஸ்ரீராமபுரம் சாய்பாபா நகர் மூன்றாவது கிராசில் வசித்து வருபவர்முனிரத்தினம். இவரது மகள்கள் மாலதி, சுதாராணி. இருவரும் கடந்தஞாயிற்றுக்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்அவர்கள் திடீரென காணாமல் போனார்கள்.
இதேபோல் அதே பகுதியில் வசிக்கும் கோபால் என்பவரின் மகள் நந்தினியும் (10)காணாமல் போனார். மூன்று சிறுமிகள் காணாமல் போனதால் பதட்டமடைந்தபெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் ஸ்ரீராமபுரம் முழுவதும்பெற்றோர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முனிரத்தினத்திற்கு மதுரையிலிருந்து கடிதம்வந்தது. உங்கள் மகள்கள் மதுரை காமராஜர் தெருவில் இருக்கும் ஆதரவற்றகுழந்தைகள் காப்பகத்தில் இருக்கிறார்கள் என அந்தக் கடிதத்தில்குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களை வந்து அழைத்துச் செல்லுங்கள் என்றும் அதில்கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இவர்கள் எப்படி மதுரைக்கு சென்றனர் என்பது குறித்துத் தெரியவில்லை. ஸ்ரீராமபுரம்போலீசார் குழந்தைகளின் பெற்றோரோடு மதுரை சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications