ஹைதராபாத்தில் பயிற்சி அகாதெமி துவக்குகிறார் மல்லேஸ்வரி
Subscribe to Oneindia Tamil
விசாகப்பட்டனம்:
இளம் வயதினருக்கு பளு தூக்கும் பயிற்சி கொடுப்பதற்காக ஆந்திர மாநிலம்ஹைதராபாத் நகரில் பளு தூக்கும் பயிற்சி அகாதெமியை, இந்தியாவுக்கு ஒலிம்பிக்வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்த கர்னம் மல்லேஸ்வரி அமைக்கிறார்.
விசாகப்பட்டனத்தில் வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் மல்லேஸ்வரிபேசுகையில், ஹைதராபாத் நகரில் அமையும் இந்த அகாதெமிக்குத் தேவையானஇடத்தை ஆந்திர மாநி அரசு கொடுத்துள்ளது. அடிப்படை வசதிகளுடன் விரைவில்இந்த அகாதெமி இயங்கத் துவங்கும்.
துவங்கிய சில காலத்திற்குப் பிறகு ஸ்பான்சர்களின் நிதியுதவியோடு அகாதெமிமேம்படுத்தப்படும். அகாதெமி ஆரம்பிப்பதற்காக மாநில அரசு ரூ. 9 லட்சம்நிதியுதவியும் வழங்கியுள்ளது.
சர்வதேச தரத்திலான வசதிகள் இந்த அகாதெமியில் ஏற்படுத்தப்படும். அதி நவீனவசதிகள் கொண்ட பயிற்சி மையமாக இது திகழும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications