For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூரசம்ஹாரம் ..திருச்செந்தூரில் பக்தர் வெள்ளம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்செந்தூர்:

கந்த சஷ்டி விழா திருச்செந்தூரில் வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டாவது வீடு திருச்செந்தூர். இங்குசூரபத்மனை முருகன் சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார விழா வருடாவருடம் சிறப்பாககொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சூரசம்ஹார விழா வியாழக்கிழமைசிறப்பாக கொண்டாடப்பட்டது.

வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு மேலக் கோவில் என அழைக்கப்படும்சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து சூரபத்மனுடன் போரிட கடற்கரைக்குகிளம்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சூரன் 8 வீதிகள் வழியாக வலம் வந்து சன்னதி தெருவழியாக 3.30 மணிக்கு கடற்கரைவந்தடைந்தான். கந்தஷஷ்டி மண்டபத்திலிருந்த ஜெயந்திநாதர், வீரபாகு மற்றும்பரிவாரங்களுடன் முருகன் கடற்கரைக்கு புற்ப்பட்டார்.

மாலை 4 மணிக்கு சூரனுடன் முருகன் போரிடும் நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 4.52மணிக்கு சூரபத்மன் தலையை துண்டித்து அவனை சம்ஹாரம் செய்தார்.

சூரசம்ஹார விழாவில் மத்திய அமைசர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழகமீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உள்ளிட்டோருடன் பல அதிகாரிகளும்கலந்து கொண்டனர் 5 லட்சம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X