இந்திர விகாஸ் பத்திரங்களில் ரூ. 7 கோடி மோசடி

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தில் போலி இந்திர விகாஸ் பத்திரங்களை விற்பனை செய்து ரூ. 7 கோடி வரைமோசடி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடிக்கு அதிகாரிகளும்உடந்தையாக இருந்தார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்திய அரசு பொதுமக்களிடையே சிறுசேமிப்பை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களைகடந்த 1984-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது. இதில் தேசிய சேமிப்புப்பத்திரங்கள், மற்றும் இந்திர விகாஸ் பத்திரங்கள் அடங்கும்.

இந்தப் பத்திரங்களில் முதலீடு செய்தால் முதலீடு செய்யப்படும் தொகை 5ஆண்டுகளில் இரட்டிப்பாகும். இந்த கால அளவு பின்னர் 6 ஆண்டுகளாகநீட்டிக்கப்பட்டது.

இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் ஏழை எளியவர்கள் முதல் வரிச் சலுகைக்காக பெரியமுதலாளிகள் வரை முதலீடு செய்தனர். இந்த சேமிப்புத் தொகையை வசூல் செய்ய பலதனியார் ஏஜெண்டுகள் கமிஷன் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டத்தில் இந்த கமிஷன் ஏஜெண்டுகள் அதிகாரிகள் உதவியுடன் பல கோடிரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரன். இவர்சிறுசேமிப்பு ஏஜெண்டான மதியழகன் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய்க்கு இந்திரவிகாஸ் பத்திரம் வாங்கினார். இந்த பத்திரத்தை சிறிது நாட்களுக்கு பின்னர் வங்கிஒன்றில் கொடுத்து கடன் வாங்க முற்பட்டார். அப்போது வங்கி அதிகாரிகள் இந்தப்பத்திரத்தை ஏற்காமல், போலி எனக் கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்வரன் மதியழகனைச் சந்தித்து விளக்கம்கேட்டுள்ளார். அப்போது இந்தப் பத்திரம் பல இடங்களில் கைமாறி வந்துள்ளது தெரியவந்தது. இதில் போலியான தபால் முத்திரை பதிக்கப்பட்டிருப்பதையும் அறிந்தனர்.

இந்த மோசடி குறித்து உடனடியாக தபால் துறை தலைமை அதிகாரிகளுக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டது. இது போன்ற போலி பத்திரங்கள் சுமார் 7 கோடி ரூபாய்அளவிற்கு மோசடி நடந்திருப்பது பற்றி அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+