கோவில்களை அரசிடமிருந்து மீட்க பா.ஜ.க. திட்டம்
சென்னை:
அரசின் பிடியிலிருந்து கோவில்களை விடுவித்து சுதந்திரமான அமைப்பிடம்ஒப்படைக்கப்பட வேண்டும் என தமிழக பாரதிய ஜனதாக் கட்சி கூறியுள்ளது.
பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள், அணித் தலைவர்கள் மற்றும் கோட்டப்பொறுப்பாளர்கள் கூட்டம் பா.ஜ.க. தலைமை அலுவலகதிதல் வெள்ளிக்கிழமைநடந்தது.
இதில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் இல.கணேசன்உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வரவிருக்கும் தேர்தல், கட்சிப் பணிகள், ஆலய நிர்வாகத்தை தமிழக அரசிடமிருந்துமீட்பது உட்பட பல பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்து நடைபெறுகிறது. சனிக்கிழமைநடைபெறவிருக்கும் கூட்த்தில் பா.ஜ.க. தலைவர் பங்காரு லட்சுமணன் கலநதுகொள்கிறார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழக்தில் இந்துக் கோயில்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமானால்அவைகள் அரசின் பிடியிலிருந்து விடுவிக்கப்ட்டு சுதந்திரமான அமைப்புகளிடம்ஒப்படைக்கப்பட வேண்டும் என தமிழகத்தைச் சேர்ந்த 6 இந்து அமைப்புகள்கூறியுள்ளன.
இந்து அமைப்புகளின் கோரிக்கைக்கு நியாயமான காரணம் இருக்கிறது. முந்தையஅரசை விட இந்த அரசில் கோயில்களின் பராமரிப்பு மேம்பட்டிருந்தாலும் முழுமைபெறவில்லை. எனவே இந்து அமைப்புகளின் கூட்டு கோரிக்கையை பா.ஜ.க. ஏற்கிறது.
வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதிவரை தமிழகத்தில நடைபெற இருக்கும்நல்லாட்சிக்கு ஆதரவு தாருங்கள் என கோரி நடைபெற இருக்கும் தாமரையாத்திரையின் போது யாத்திரைக்கு தலைமை ஏற்கும் தலைவர்கள் தமிழகத்திலுள்ளமுக்கியக் கோவில்களுக்குச் சென்று கோவில்களை அரசிடமிருந்து மீட்பது குறித்துமக்கள் கருத்தை கேட்டு அறிவார்கள்.
அந்த கருத்துக்களை ஆய்வு செய்தபின் அரசுக்கு பரிந்துரை செய்ய குழு ஒன்றுஅமைக்கப்படும். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் இந்த அம்சம்நிச்சயமாக இடம் பெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.