திமுகவைக் கண்டித்து களத்தில் குதிக்கிறது அதிமுக
சென்னை:
ஜெயலலிதாவைக் கண்டித்து திமுகவினர் நடத்தி வரும் போராட்டத்தை முறியடிக்கும்வகையில், அதிமுக சார்பில் பஞ்சாயத்து, நகர அளவில் எதிர் போராட்டம்நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து தவறான பிரசாரத்தை திமுகமேற்கொண்டு வருகிறது. கருணாநிதி குறித்து நான் தவறாகப் பேசியதாக திமுகவினர்மக்கள் மத்தியில் பொய்ப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மக்களிடம் விளக்கஅதிமுக முடிவு செய்துள்ளது. நவம்பர் 11ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இந்த விளக்ககூட்டம் தமிழகம் முழுவதிலும் உள்ள பஞ்சாயத்துக்கள், நகரங்களில் நடைபெறும்.
கட்சியின் அனைத்துப் பிரிவினரும் இந்த அமைதியான வழியில் அமைந்தபோராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைக்க வேண்டும்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் தெளிவானமுறையில் விளக்கிட வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக பொதுக்குழுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில், அதிமுக ஆட்சிக்குவந்தால், முதல்வர் கருணாநிதி தனது மீதமுள்ள வாழ்நாளை சிறையில்தான் கழிக்கநேரிடும் என்று பேசினார். இதையடுத்து திமுக தரப்பில் ஜெயலலிதாவைக் கண்டித்துமாநிலம் முழுவதும் திமுகவினர் கண்டனப் பேரணிகளை நடத்தி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.