புதிய விளையாட்டுக்கொள்கை.. பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம்
டெல்லி:
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் புதிய விளையாட்டுக் கொள்கை அடுத்த ஆண்டு துவங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும்என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ஷா தெரிவித்தார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புதிய விளையாட்டுக் கொள்கை உருவாக்குவது குறித்து பலமுறை பேசப்பட்டு வந்தது. ஆனால்கிரிக்கெட் சூதாட்டம் குறித்த விசாரணை மற்றும் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மோசமாக விளையாடியது உள்பட பல காரணங்களுக்காகபுதிய விளையாட்டுக் கொள்கை உருவாக்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இவை இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே விளையாட்டுக் கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டிருக்கும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடாது. வாரிய நடவடிக்கை குறித்து விசாரணை ஏதும் நடத்தப்படாது.மேலும், கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ. கிரிக்கெட் வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறவில்லை என்றார் அவர்.
இதற்கிடையே, கிரிக்கெட் வாரிய தலைவர் முத்தையா, அமைச்சர் தின்ஷாவைச் சந்தித்துப் பேசினார். இருவரும் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து சிபிஐ சமர்பித்தஅறிக்கை குறித்து விவாதித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications