"அதிமுகவினர் நம்பிக்கை இழந்து விட்டார்கள்
சென்னை:
ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியாது, அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நிலைநிலவுவதால் அதிமுக தொண்டர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று திமுகபொதுச் செயலாளரும், கல்வி அமைச்சருமான அன்பழகன் கூறியுள்ளார்.
ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் கருணாநிதியை ஆயுள் காலம் முழுவதும் சிறையில்அடைப்பேன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசியதை கண்டித்துதி.மு.க. சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னைதுறைமுகத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் அமைச்சர் அன்பழகன் பேசினார்.
அவர் பேசுகையில், நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் ஜெயலலிதா,எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் கருணாநிதியை அவர்உயிரோடு இருக்கும்வரை சிறையில் அடைப்பேன் என்றும், தி.மு.க.வை அழிப்பேன்என்றும் ஆணவத்தோடு பேசியிருக்கிறார்.
அவர் ஆட்சிக்கு வந்து விடுவாரோ என்ற கவலை எங்களுக்கு இல்லை. தமிழக மக்கள்அந்த அளவுக்கு ஏமாளிகள் அல்ல. அப்படியே அவர் ஒருவேளை ஆட்சிக்குவந்துவிட்டாலும் கருணாநிதியை சிறையில் வைக்க முடியாது. குற்றத்தைநீதிமன்றத்தில் நிரூபித்தால் தான் யாருக்கும் தண்டனை வழங்க முடியும். யாரும்யாரையும் சிறையில் அடைத்துவிட முடியாது.
ஜெயலலிதாவால் இனி தேர்தலில் நிற்க முடியாது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது என்றநம்பிக்கை இழந்த நிலையில் அ.தி.மு.க.வி.னர் இருக்கிறார்கள். அவர்களை உசுப்பிவிடுவதற்காக ஜெயலலிதா இப்படி பேசி வருகிறார். தனக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனையை திசை திருபபுவதற்காக ஏதேதோ கூறுகிறார்.
கூச்சப்படாமல் எந்த மோசடியும் செய்யத் துணிந்தவர் ஜெயலலிதா. மொத்தம் 60ரூபாய் சம்பளம் வாங்கியவருக்கு 2 ஜவுளிக் கடை அளவுக்கு பட்டுப் புடவைகள்,பாட்டா ஷோ ரூம் அளவுக்கு செருப்புகள் எப்படி வந்தன. கருணாநிதியை சிறையில்தள்ளுவேன் என்று கூற இந்த கிரிமினல் பேர்வழிக்கு என்ன தகுதி இருக்கிறது?.
எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற கனவை வரவழைத்துக் கொண்டுஜெயலலிதா இப்படி பேசுகிறார். எனவே மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்என்றார் அன்பழகன்.