வீரப்பன் விவகாரத்தை கிளப்புகிறது த.மா.கா.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளரான நெடுமாறனை அரசு தூதராககாட்டிற்கு அனுப்பியது, விவசாயிகளின் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை சட்டமன்றத்தில்எழுப்புவோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சோ.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் நடைபெற்று சட்ட-ஒழுங்கு பிரச்சனைகளையும், வீரப்பன் விவகாரத்தையும் தாங்கள் எழுப்பப்போவதாக அவர் தெரிவித்தார்.

போட்டியில், பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியது. அதைப் பார்த்துக் கொண்டுமாநில அரசு பேசாமல் இருக்கிறது. இதனைக் கண்டித்து வெளியில் போராட்டம் நடத்தியது போலசட்டமன்றத்திலும் பிரச்சனையை எழுப்புவோம்.

கூட்டுறவு கடன்தொல்லையால் விவசாயிகள் பெரும் அவதிப்படுகின்றனர். அவர்களின் உற்பத்தி பொருட்களானநெல் கரும்பு ஆகியவற்றிற்கு விலை இல்லை. இதற்கு தமிழக அரசிடமிருந்து பதிலும் இல்லை.

ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்கள் ஆகியும் இதற்குத் தீர்வு இல்லை. ராஜீவ் காந்தியை கொலை செய்தவிடுதலைப்புலிகளின் ஆதரவாளரான நெடுமாறனை அரசு தூதராக அனுப்பியது மன்னிக்க முடியாத குற்றமாகும்.இதற்கெல்லாம் சரியான பதில்களை நாங்கள் அரசிடமிருந்து பெறுவோம்.

சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. ரெளடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்றார் சோ.பாலகிருஷ்ணன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+