நள்ளிரவுக் கொள்ளை .. நடுக்கத்தில் ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த கொள்ளையால் பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர். போலீசார் நள்ளிரவு ரோந்துப் பணியைத் தீவிரமாக்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், தில்லை நகரில் குடியிருந்து வருபவர் அனில்குமார் (30). இவர்நகை வியாபாரம் செய்து வருகிறார். நள்ளிரவில் இவர் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு கொள்ளைக் கும்பல், வீட்டின் மாடியில் உள்ளஜன்னல் வழியாக வீட்டிற்குள் இறங்கியது.
இந்த கும்பல், நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்று பீரோவைஉடைத்தது. அதில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிஓடிவிட்டது. இதில் சுமார் 1.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் 40 ஆயிரம்ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அனில்குமார் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இதே போன்று சிவகிரி அருகே உள்ள காட்டைப் புதூரைச் சேர்ந்தவர் துரைசாமி (58).இவர் தனது மனைவி மற்றும் மருமகள் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத ஒரு கும்பல் இவர்களது வீட்டில் புகுந்தது.
சத்தம் கேட்டு எழுந்த துரைசாமி மற்றும் குழந்தைகளைக் கட்டிப் போட்டது. பின்னர்அங்கிருந்த 18 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைஎடுத்துக் கொண்டு தப்பி விட்டது.
இது போன்று அடிக்கடி நடந்து வரும் கொள்ளையால் பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய போலீசார்வழக்கம்போல உத்தரவிட்டுள்ளனர். அதே சமயம், இனி கொள்ளை சம்பவங்கள்நடக்காமல் தடுக்க இரவு நேர ரோந்துப் பணியைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications