இந்தியர்களைக் கவரும் சீனாவின் ஃபாலுன் தாஃபா
டெல்லி:
சீனாவின் தாவோ கொள்கை, புத்த மதக் கொள்கை ஆகியவற்றை உள்ளடக்கியஉடற் பயிற்சியை பயிற்றுவிக்கும் ஃபாலுன் தாவா அமைப்பு டெல்லி மக்களிடையேநல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சீனாவில் இந்த அமைப்பு "ஃபாலுன் காங் என்று அழைக்கப்படுகிறது. ஆனால்சீனாவில் இது தடை செய்யப்பட்டுள்ளது. 1992-ம் ஆண்டு லி ஹோங்சி என்பவரால்இது அறிமுகப்படுத்தப்பட்டது. அவரை கம்யூனிச சீன அரசு நாட்டை விட்டுவெளியேற்றியது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார்.
இயக்கம் சீனாவில் தோன்றி, உலகெங்கிலும் பரவியது. இந்தியாவில் இந்த இயக்கத்தைபரப்ப வந்துள்ள பிரான்சு நாட்டவரான மிங் ஃபா என்பவர் கூறுகையில, இந்தியர்கள்புதிய எண்ணங்களை வரவேற்கிறார்கள். மேலும் பிரார்த்தனை சம்பந்தமானவிஷயங்களை மற்ற எந்த நாட்டினரையும் விட மிக வேகமாக புரிந்து கொள்கின்றனர்.
இது யோகா பயிற்சி முறை போல் காணப்பட்டாலும் இது யோகாவிலிருந்து முற்றிலும்மாறுபட்டது. தாஃபாவில் பயிற்றுவிக்கப்படும் பயிற்சிகள் மிகவும் எளிமையானவை.மூச்சை இழுத்துப் பிடிக்கும் கடினமான பயிற்சிகளோ , அல்லது மிக கடினமான உடலைவருத்தும் பயிற்சிகளோ கிடையாது என்றார்.
டெல்லியில் உள்ள பூங்காக்களில் அதிகாலைகளில் தாஃபா பயிற்சியில் ஈடுபடுவோர்நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இந்தப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் 42வயதான ரேணு நாக்பால் என்ற பெண் கூறுகையில், இந்த பயிற்சிக்குப் பிறகு என்உடல் நிலை நன்கு உள்ளது. மன அமைதியும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன் நான் செய்த பலவித பயிற்சிகளைக் காட்டிலும், இந்த பயிற்சி எனக்குதிருப்தி அளிக்கிறது என்கிறார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications