தாயிடமே பணம் திருடிய "தங்க மகன்
கோவை:
தாயிடமே ஒரு லட்ச ரூபாய் திருடிய மகனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தாயும், மகனுமானாலும் வாயும் வயிறும் வேறு தானே? இதை நிரூபிக்கும் வகையில்ஒரு சம்பவம் கோவை அருகே நிகழ்ந்துள்ளது.
கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (45). இவர் தொழிலதிபராக உள்ளார்.பஞ்சு மற்றும் நூால்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். இவரது மகன்சரவணன் (25). சொந்தமாக லாரி சர்வீஸ் நடத்திவருகிறார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டைச் சேர்ந்த பாண்டித் துரைஎன்பவர் லட்சுமியிடம் கடனாக 5. 2லட்ச ரூபாய் மதிப்புள்ள பருத்தி மற்றும் நூல்கள்பெற்றார். ஆனால், இதற்கான தொகையைத் திருப்பிக் கொடுக்கவில்லை.
இந்த தொகையைக் கோரி லட்சுமி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதில் வெற்றிபெற்றார். இவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் 3 லட்சம் மதிப்புள்ள நூலும், ஒரு லட்சரூபாய் ரொக்கமும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள செக்கும் கிடைத்தது.
இதனை ஈரோடு சென்று பெற்றுக் கொண்ட லட்சுமி, அருகில் கொமாரபாளையத்தில்பிரசவத்திற்காகச் சென்றுள்ள மருமகளைப் பார்க்கச் சென்றார். அங்கு தங்கிய லட்சுமி,குழந்தையையும், மருமகளையும் பார்த்து விட்டு கோவை திரும்ப எண்ணினார்.ஆனால் இரவு நேரமாகிவிட்டதாலும் கையில் பணமும் செக்கும் இருந்ததாலும்காலையில் செல்ல எண்ணி தங்கி விட்டார்.
காலையில் அவர் கண் விழித்துப் பார்த்தபோது ஒரு லட்ச ரூபாய் பணம் காணமல்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அதே சமயம், அவரது மகன் சரவணனும்இல்லை.
எனவே, சந்தேகமடைந்த அவர், தனது மகன் மீது போலீசில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.