ஜாதிக் கட்சிகளுடன் யாரும் சேராதீர்கள் .. இந்து முன்னணி
கோவை:
தேச ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு ஜாதிக் கட்சிகளுடன் எந்த ஒரு அரசியல்கட்சியும் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என இந்து முன்னணி கூறியுள்ளது.
கோவையில் இந்து முன்னணியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார்.
மாநிலத் தலைவர் துரைசங்கர், பொதுச் செயலர் ஜெயராஜ், நிறுவன அமைப்பாளர்ராமகோபாலன், அமைப்பாளர் வீரபாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்து விரோதப் போக்கை வலியுறுத்தி ஒவ்வொருவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளில் இந்துமுன்னணி விரைவில் ஈடுபடவுள்ளது.
சமுதாயத்தில் பிரிவினையை உண்டாக்கி அவற்றில் அரசியல் ஆதாயம் தேட ஜாதிக்கட்சிகள் முனைந்து வருகின்றன. இதனைத் தடுத்து நிறுத்தவும், சமுதாய, தேசஒற்றுமையைக் கருத்தில் கொண்டு ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை அரசியல்கட்சிகள் அறவே தவிர்க்க வேண்டும்.
இந்து சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், திருப்பரங்குன்றம்மலை உச்சியில் இந்து அறநிலையத் துறை சார்பில், பெரிய கார்த்திகை தினத்தன்றுதீபம் ஏற்ற வேண்டும்.
ராமநாதபுரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணித் தலைவர்ராமுவின் குடும்பத்தினருக்கு அரசு 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளிக்க வேண்டும்.
திருச்செந்தூரில் நாழிக் கிணறு எனப்படும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதியை மூடி,அங்கு விடுதி கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விடுதி கட்டும்ஏற்பாட்டை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு அரசு தடைவிதிக்க வேண்டும்.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது இடங்களிலும் ஒலி பெருக்கிஉபயோகிப்பதைத் தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை அரசு அமல்படுத்த வேண்டும். அவ்வாறு அமல்படுத்தப்படாவிட்டால்இது குறித்து இந்து முன்னணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும்.
பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக பாதிரியர்களை நியமிக்கக் கூடாதுபோன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.