அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவரானார் செங்கோடன்
நாமக்கல்:
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த செங்கோடன்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தசொங்கோடன், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்பு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவராக ஒ. பி அகர்வால்பதவியிலிருந்தார். இவரது நான்கு ஆண்டுகாலப் பதவி முடிந்ததையடுத்துசெங்கோடன் பதவி ஏற்கிறார்.
இதற்கான பதவி ஏற்பு விழாவும் தமிழகத்தில் நடக்கிறது. பதவி ஏற்பு விழா எங்கு,எப்போது நடக்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அமைப்பு நான்கு மண்டலங்களைக்கொண்டுள்ளளது. நான்கு அமைப்புகளுக்கும் துணைத் தலைவர்கள் போட்டிநடக்கவுள்ளது.
தற்போது மேற்கு மண்டலத்திற்கு 5 பேரும், வடக்கு மண்டலத்திற்கு 3 பேரும் களத்தில்உள்ளனர். தெற்கு மண்டலத்திற்கு போட்டியின்றி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications