தர்மபுரியில் நக்சல்கள் கரம் வலுப்படுகிறது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில், தலைமறைவாக உள்ள நக்சல்கள் ஒன்று சேர்ந்து நக்சல் இயக்கத்தலைவர் ரவீந்திரனுக்குச் சிலை அமைக்க முயற்சித்து வருகின்றனர். இதற்கான வசூல்வேட்டையில் இவர்கள் இறங்கியுள்ளனர்.
தர்மபுரியில் நக்சல்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தஆதிக்கத்தை தடுக்கவும், அவர்களை ஒடுக்கவும் அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. கடந்த ஆண்டு இந்த நக்சல் இயக்கத்தில் பிளவு ஏற்பட்டது.
நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த பலர் விடுதலைச் சிறுத்தை இயக்கத்தில் சேர்ந்தனர்.இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கோஷ்டி மோதலில்மாராண்டஹள்ளி என்ற இடத்தில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ரவீந்திரன் கொலைசெய்யப்பட்டார்.
ரவீந்திரன் கொலை செய்யப்பட்டு ஓராண்டு முடிவடைந்து விட்டது. இதையடுத்துரவீந்திரனுக்கு சிலை வைப்பது குறித்து தலைமறைவாக உள்ள நக்சல்கள் முயற்சிமேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தர்மபுரி மாவட்டம், பூதிப்பூரில் நக்சல்இயக்கத்தின் ரவீந்திரனுக்கு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
நக்சல் இயக்கத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது போலீசார் பலரைக் கைதுசெய்தனர். இதில் தற்போது இந்த இயக்கத்தின் தலைவனாகச் செயல்பட்டு வரும்பாலன் என்பவரும் உள்ளார். இதில் கைதான 5-க்கும் மேற்பட்டோர் ஜாமீனில்வெளியே வந்து தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் இவர்களில் முக்கியப் பிரமுகர்களான பாலன், இளங்கோவன், காளிதாஸ்ஆகியோர் பூதிப்பூரில் நடமாடி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்கள்பகலிலேயே ரவீந்திரனுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியை வலம்வந்துள்ளனர். இந்த ஸ்தூபியைப் பார்த்து விட்டு சாவகாசமாக டீ குடித்து விட்டுச்சென்றுள்ளனர்.
மேலும், ரவீந்திரன் இறந்து ஓராண்டு முடிந்த நிலையில் அவரது நினைவாக தர்மபுரிமாவட்டத்தின் முக்கிய இடத்தில் சிலை ஒன்று வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.இதற்கான நிதியை பலரிடம் மிரட்டி வசூல் செய்து வருகின்றனர். இந்த வசூல் பற்றிகேள்விப்பட்ட போலீசார் உஷாராடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications