For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ்காரரிடமே கைவரிசை காட்டிய போலீஸ்காரர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலீஸ்காரர் ஒருவரின் சூட்கேசை இன்னொரு போலீஸ்காரர் திருடிக் கொண்டுஓடியபோது மற்ற போலீஸ்காரர் மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையத்தில்ஒப்படைத்தனர்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் போலீஸ்வட்டாரத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ்கான்ஸ்டபிளாக இருப்பவர் கருணாமூர்த்தி. ஏற்கனவே தவறு செய்து ஓராண்டுதற்காலிக பணி நீக்கத்திற்கு பின்னர் இப்போது தான் பணியில் சேர்ந்துள்ளார்.

இவரும் மற்ற போலீஸ்காரர்களும் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில்தங்கியிருந்தனர். திங்கள் கிழமை அதிகாலை 3 மணியளவில் அறையில் மற்றவர்கள்எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர். கண் விழித்த கருணாமூர்த்தி அறையில் இருந்தசூட்கேஸ் மீது ஆசை கொண்டார். அது அருணகிரிநாதன் என்ற போலீஸ்காரருக்குசொந்தமானது.

விடிந்தும் விடியாத அந்த காலை வேளையில் சூட்கேசை திருடிக் கொண்டு அறையைவிட்டுக் கிளம்பி விட்டார் கருணாமூர்த்தி. எழும்பூரில் உள்ள அழகுமுத்துக்கோன்சிலை அருகே பெட்டியும் கையுமாக கருணா மூர்த்தி வருவதை கண்ட இரவு ரோந்துப்பணியில் இருந்த போலீசார் சந்தேகம் கொண்டனர்.

பெட்டி பற்றி விசாரித்தபோது நானும் போலீஸ்தான் என்று கருணா மூர்த்திமிரட்டியிருககிறார். ஆனால், ரோந்துப் பணி போலீசார் நம்பாமல் அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் நிலையத்திற்குச் சென்றனர்.

அதற்குள் பெட்டியை பறி கொடுத்த அருணகிரி நாதனும் புகார் கொடுக்க அங்கேவந்தார். பெட்டி விஷயம் வெளிச்சமானது. சக போலீசாரிடமே கை வரிசை காட்டியகருணாமூர்த்தியை கைது செய்து சிறையில் தள்ளினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X