கரும்பு விவசாயிகளுக்காக போராடிய அதிமுக
கரூர்:
திருப்பூர் சாயத் தொழிற்சாலையிலிருந்து வரும் ரசாயனக் கழிவுகள் காவிரி ஆற்றில் கலப்பதால் கரும்புப் பயிர்கள் மோசமடைவதை எதிர்த்து கரூர் அதிமுகதொண்டர்கள் மற்றும் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கம் திங்கள்கிழமை ஊர்வலம் நடத்தியது.
இந்த ஊர்வலம் தளவாப்பாளையத்திலிருந்து, வேலாயுதப்பாளையம் வரை சென்றது. ஊர்வலத்தை கரூர் அதிமுக எம்.பி. சின்னசாமி தளவாப்பாளையத்தில்கொடியசைத்துத் துவக்கி வைத்தார். ஊர்வலம் அங்கிருந்து வேலாயுதப்பாளையத்தை அடைந்தது.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சின்னச்சாமி பேசுகையில், ரசாயனக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் கரும்புப் பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.மேலும் நிலத்தடி நீரில் அசுத்தம் கலக்கிறது. இந்த நீரைக் குடிக்கும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன.
இதைத் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கரும்பு விவசாயிகள் மற்றும் கரூர் அதிமுக தொண்டர்கள்சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும் என்றார் சின்னசாமி
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications