கசப்புணர்வுடன் முடிந்த கரும்பு விவசாயிகள் போராட்டம்
அரூர்:
கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது அதிகாரிகளுக்கும்விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் தாலுகா அலுவலகம் மற்றும் அரசுவாகனங்கள் சூறையாடப்பட்டன.
ஈரோடு மாவட்டம், அரூரில் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் மற்றும்பேரணி கடந்த நவ.4 -ம் தேதி நடந்தது. கரும்புக்கு உரிய விலை தர வேண்டும்,சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைஉடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்புவிவசாயிகள் இப் போராட்டத்தை நடத்தினர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மாசி முன்னிலை வகித்தார்.அரூரில் நடந்த பேரணிக்குப் பின்னர் தாலுகா அலுவலகத்திற்குச் சென்று விவசாயிகள்ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது திடீரென அங்கிருந்த அரசு ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையேவாய்த்தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து திடீரென விவசாயிகள் அலுவலகத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களைசூறையாடினர். ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத்தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக வந்து விவசாயிகளை அப்புறப்படுத்தினர்.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வருவாய்த் துறைஅலுவலர்கள் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் இறங்கினர். உரிய நடவடிக்கைமேற்கொள்வதாக போலீசார் அளித்த உறுதியின் பேரில் இப் போராட்டம்கைவிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவிவசாயிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில்,
அரூர், பாறைப்பட்டி, சிந்தல்வாடி, ராமியான்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்தவிவசாயிகள் சிலரைப் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது, விவசாயிகள் கைது செய்யப்பட்டது குறித்து மீண்டும் போராட்டம் நடத்தவிவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளனர். இதனால்,
அரூரில், மீண்டும் பிரச்னை உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications