ஈரோட்டில் தற்கொலை அலை .. ஒரே நாளில் 3 பேர் சாவு
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைப் புளியம்பட்டி அருகே உள்ள பட்டிமாணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராணி.இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைஉள்ளது. இந்நிலையில், செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
குடிப்பழக்கத்தை ராணி கண்டித்துள்ளார். ஆனால் செல்வராஜ் பழக்கத்தை நிறுத்தாமல்தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி விஷம் குடித்துதற்கொலை செய்து கொண்டார்.
சூரம்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தர வடிவேலு. இவர் வெல்டிங் லேத் வைத்து நடத்தஆசைப்பட்டார். இதற்காக தனது தந்தையிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம்கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுக்கவே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு அன்னக்கொடியூரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் வயிற்று வலிகாரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட கொடுமைதாளாமல் விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.