அழகிப் போட்டி .. பா.ஜ.க. மகளிர் போராட்டம்
சென்னை:
சென்னையில் வர்த்தக நிறுவனம் ஒன்று நடத்திய அழகிப் போட்டியைக் கண்டித்துபாரதீய ஜனதாக் கட்சியின் மகளிர் பிரிவு சார்பில் போராட்டம் நடந்தது.
சென்னையைச் சேர்ந்த வர்த்தக நிறுவனம் ஒன்று தனது வியாபாரப் பொருள்தொடர்பாக அழகிப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை எம்.ஆர்.சி. நகரில்உள்ள மைதானத்தில் இது நடந்தது.
இதைக் கண்டித்து பா.ஜ.க. மகளிர் அணித் தலைவர் லலிதா சுபாஷ் தலைமையில்பா.ஜ.க. மகளிர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் எம்.பி. வைஜயந்திமாலாபாலியும் கலந்து கொண்டார்.
லலிதா சுபாஷ் பேசுகையில், வியாபாரத்தை அதிகரிக்க பல வழிகள் இருக்கும் போதுபெண்களை வியாபாரத்தை அதிகரிக்க உபயோகப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
அழகிப் போட்டிகள் நடத்துவது அயல் நாட்டினரின் வழக்கம். அது நம் நாட்டிற்குஉகந்தது அல்ல என்றார்.
மயிலாப்பூர் லஸ் அருகே நடந்த போராட்டத்தில் பா.ஜ.க.வின் ஆண் உறுப்பினர்களும்கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.