பா.ஜ.க.வின் தாமரை ரத யாத்திரை துவங்கியது
நாகர்கோவில்:
மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பாரதிய ஜனதா தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் தாமரை ரத யாத்திரையை மத்தியவிளையாட்டுத்துறை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் திங்கள்கிழமை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கன்னியாக்குமரி மாவட்டம் மண்டைக்காடு கோவிலில் துவக்கவிழா நடந்தது. ரத யாத்திரை 8 தென் மாவட்டங்கள் வழியாக செல்லும். இறுதியில்டிசம்பர் 2 ம் தேதி திருச்சியை சென்றடையும். அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ரத யாத்திரைக்குத் தலைமை தாங்குவார்.
அகில இந்திய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் திருச்சியில் முடிவடையும் தாமரை ரத யாத்திரையின் இறுதி நாள் விழாவில் கலந்துகொள்வார்.
யாத்திரை குறித்து அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறுகையில், பாரதிய ஜனதா கட்சியின் பல சாதனைகள் குறித்து மக்களுக்கு அவ்வளவாகத்தெரியவில்லை. சாதனைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே இந்த ரத யாத்திரை என்றார்.
யு.என்.ஐ.