மனித உரிமைக் கமிஷனின் பாரபட்சம் .. நெடுமாறன்
சென்னை:
தடா கைதிகள் விடுதலை விஷயத்தில் மனித உரிமைக் கமிஷன் இரட்டை வேடம்போடுகிறது என பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து விடுவிக்கும் தூதுக் குழுவில் பழ.நெடுமாறன்,பேராசிரியர் கல்யாணி, சுகுமாறன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடகாவிலும், தமிழகத்திலும் உள்ள தடா கைதிகளை விடுவிக்குமாறு வீரப்பன்கேட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. இந்த விஷயத்தில் தேசியமனித உரிமைக் கமிஷன் தலையிட வேண்டும் என இவர்கள் மனு அளித்திருந்தனர்.ஆனால் தேசிய மனித உரிமைக கமிஷன் இந்த மனுவை நிராகரித்தது.
இதை கண்டித்து பழ. நெடுமாறன், கல்யாணி, சுகுமாறன் ஆகியோர் திங்கள்கிழமையன்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த அறிககையில் அவர்கள்கூறியிருப்பதாவது:
மைசூரில் இருக்கும் தடா கைதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில்மனித உரிமைக் கமிஷன் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் அதிரடைப்படைவீரர்களின் அத்து மீறல்கள் பற்றி எடுத்துக்கூற முடியும்.
சதாசிவ கமிஷன் விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டாலும் வேறொருபோலீஸ் அதிகாரி இத்தகைய தடையைப் பெறக்கூடிய நிலை இருக்கிறது.
மனித உரிமைக் கமிஷன் விசாரணையைத் தொடர்வதற்கான அனுமதியைப்பெற்றிருந்தால் அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்டோர், தடா வழக்கினால்பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் நல்ல வழி பிறந்திருக்கும்.
பஞ்சாப் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற மனித உரிமைக் கமிஷன்தடா கைதிகள் விஷயத்தில் தலையிட மறுத்தது இரட்டை வேடமாகும். இது குறித்துஉச்ச நீதிமன்றத்தை நாங்கள் அணுக உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications