For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவர்களுக்கு போதை மருந்து .. 3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவையில் பள்ளி, கல்லூரி மணவர்களுக்கு ஊசிபோட்டு போதைக்கு அடிமையாக்கிவந்த கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் வழக்கம்போல வாகனச் சோதனையில் துடியலூர் அருகே ரூரல் போலீசார்ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையை கோவை ரூரல் எஸ்.பி., தாமரைக் கண்ணனும்பார்வையிட வந்தார்.

அப்போது வேகமாக இரண்டு பேர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். எஸ்.பி.,தாமரைக்கண்ணன் இவர்களை நிறுத்தி சோதனையிடுமாறு உத்தரவிட்டார்.

பைக்கில் இரண்டு வந்து இந்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் தடுத்து நிறுத்திவிசாரணை செய்தனர். மேலும் அவர்களிடம் சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் இருவரிடம் ஒரு சிரிஞ்ச் மற்றும் பென்சோசைட் என்ற ஒரு மி.லிபாட்டில்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்த மருந்து போதை தரக்கூடியது. இதனுடன்வேறு ஒரு மருந்தையும் கலந்து போதை மருந்தாக இவர்கள் மாற்றி வந்தனர்.

இவர்களிடம் நடந்த விசாரணையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயசங்கர்என்பவரிடமிருந்து பெற்றதாக ஒப்புதல் அளித்தனர். இதன்படி போலீசார் பொள்ளாச்சியில்அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், விஜயசங்கரைக் கைது செய்தனர்.அவரிடமிருந்து 20 பாட்டில்கள் மருந்தைக் கண்டுபிடித்தனர்.

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த மருந்தைப் பயன்படுத்திஆங்காங்கே பள்ளி மாணவர்கள் உட்பட கல்லூரி மணவர்களுக்கும் போதை ஊசி போட்டுபழக்கப்படுத்தி வந்ததாகக் கூறினர்.

இவ்வாறு பழக்கப்படுத்திக் கொண்ட மாணவர்கள், இந்த பழக்கத்தை விட முடியாமல்,அதற்கு அடிமையாகி விடுவர். இதனைப் பயன்படுத்தி நிறைய பணம் சம்பாதிக்கஇத்தகைய செயலில் ஈடுபட்டதாக இவர்கள் கூறினர்.

மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இத்தகைய போதைப் பொருள்விற்பனையில் ஒரு ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணையில்இறங்கியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X