முதல் மழை ...
பெஷாவர்:
துப்பாக்கிச் சத்தம், கடுமையான கட்டுப்பாடுகள், மோசமான வறட்சி என எப்போதும்சூடாகவே காணப்படும் ஆப்கானிஸ்தானில் 18 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாகமழை பெய்துள்ளது.
கடந்த 18 மாதங்களில் இப்போதுதான் முதல் முறையாக ஆப்கனில் மழை பெய்துள்ளதுஎன்று தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகம்மது ஒமர் கண்டஹர் நகரில்கூறியுள்ளார். (இந்த நகரில்தான் முன்பு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டுகொண்டு வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.).
முல்லா ஒமர் கூறுகையில், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதைப் பார்க்கும்போதுமகிழ்ச்சியாக இருக்கிறது. பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன்உள்ளனர் என்றார்.
ஹெராத், பார்யாப், நிம்ரோஸ், நங்கர்ஹார், குனார் மற்றும் பல மாநிலங்களில் மழைபெய்துள்ளது. தலைநகர் காபூலிலும் ஓரளவு மழை இருந்தது.
இருப்பினும் இந்த மழையால், வறட்சி நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றுவானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வறட்சி காரணமாக ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள், பக்கத்து நாடான பாகிஸ்தானுக்குஇடம் பெயர்ந்து சென்று விட்டனர்.
ஆப்கானிஸ்தானில் வறட்சி நிலை தொடர்ந்தால், சோமாலியா போன்றமோசமான நிலைஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று கடந்த மாதம் உலக உணவுத் திட்டக் கழகம்எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications