திருவள்ளூரில் சாலை விபத்து-8 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த வேன், எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயேஇறந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.
இவ்விபத்து திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கங்கம்மா சத்திரம் என்ற பகுதியில் புதன்கிழமை அதிகாலை நடந்தது.
விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த விவரம்எதுவும் தெரியவில்லை.
அரசு பஸ் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications