என் துப்பாக்கி எனக்கே எனக்கு...நடராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட எனது துப்பாக்கியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை தனி நீதிமன்றத்தில்சசிகலாவின் கணவர் நடராஜன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்பட நால்வர் மீதான வழக்கு தனி நீதிமன்றத்தில்நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தனி நீதிமன்றத்தில் புதன்கிழமை நடராஜன், ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எனக்கு தொடர்பில்லை. இந்த வழக்குத் தொடர்பாக விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்எனது துப்பாக்கியை பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.

நான் அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்று தற்போது இரண்டு பத்திரிக்கைகளுக்கு ஆசிரியராக இருந்து வருகிறேன். இந்த வழக்கிற்குதொடர்பில்லாத சுந்தரவதனம் (சசிகலாவின் அண்ணன்) வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் ஒப்படைத்து விட்டனர்.

அதேபோல் எனது துப்பாக்கியையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள்ஆதித்தன் வருகிற 15 ம் தேதி பதில் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+