நான் இனி காட்டுக்குள் போக மாட்டேன்- நெடுமாறன் "பல்டி"
சென்னை:
வீரப்பனைச் சந்திக்க இனி காட்டுக்குள் செல்ல மாட்டேன் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்அறிவித்துள்ளார்.
காட்டுக்குள் பழ. நெடுமாறன் செல்வதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. முன்னதாககாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இவ் விஷயத்தில் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.
இப்போது காங்கிரசுக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரசும் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது.சட்டசபையில் செவ்வாய்க்கிழமை த.மா.கா., அ.தி.மு.க. ஆகியவை இந்தப் பிரச்சனையைக் கிளப்பின.
ஆனால், இது குறித்துப் பேச சபாநாயகர் பழனிவேல் ராஜன் அனுமதி மறுத்தார். இதையடுத்து அக் கட்சிகள்வெளிநடப்பு செய்தன. த.மா.க. சட்டப் பேரவைத் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் நெடுமாறனை கடுமையாகவிமர்சனம் செய்தார்.
இதையடுத்து இனி காட்டுக்குள் செல்ல மாட்டேன் என நெடுமாறன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டஅறிக்கையில், என் இனிய நண்பரும் தேசிய பற்றாளருமான சோ. பாலகிருஷ்ணனை காட்டுக்குள் அனுப்புமாறுமுதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவர் காட்டுக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்துப் பேசி ராஜ்குமாரைமீட்டு வரட்டும்.
நான் மனிதாபிமான அடிப்படையில் தான் காட்டுக்குள் சென்றேன். அரசுத் தூதராக செல்லவில்லை. கர்நாடகத்தில்வசிக்கும் 40 லட்சம் தமிழர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் சிலர் இந்தப் பிரச்சனையை குழப்பிவருகிறார்கள்.
இவ்வாறு நெடுமாறன் அறிக்கையில் கூறியுள்ளார்.
நெடுமாறனின் இந்த திடீர் பல்டியால் கர்நாடக அரசும், ராஜ்குமார் குடும்பத்தினரும் பெரும்கவலையடைந்துள்ளனர். அவர்களை விட கருணாநிதி அதிக வருத்தம் அடைந்துள்ளார். சட்டசபை கூட்டம்முடிவதற்கு முன்பே ராஜ்குமாரை மீட்டு வந்துவிடலாம் என கருணாநிதி நம்பினார். அது நடக்காமல் போகும் நிலைஏற்பட்டுள்ளது.
இரு நாட்களாக நெடுமாறன், நக்கீரன் கோபாலுடன் தொலைபேசியில் தொடர்ந்து பேசி வரும் கருணாநிதி மீண்டும்நெடுமாறனுடன் பேசுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications