இலங்கையிலிருந்து தமிழக மீனவர்கள் விடுதலை
சென்னை:
இலங்கை ராணுவம் கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வரும் 10 ம் தேதி தமிழகத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெனிபர் சந்திரன் கூறியதாவது:
நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 21 ம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற 4 பேர் இலங்கைகடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைதான மைக்கேல், கிப்சன், சுப்ரமணியன், நிக்கோலஸ் ஆகிய 4 பேருமே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த 4 மீனவர்களையும் விடுவிக்க தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. அதன் பலனாக 4 பேரையும் விடுதலை செய்ய இலங்கை கோர்ட்உத்தரவிட்டது.
இதையடுத்து 4 மீனவர்களும் வரும் 10 ம் தேதி விடுதலை செய்யப்படுகிறார்கள். அன்றைய தினம் கொழும்பில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ்விமானத்திற்கு புறப்பட்டு பிற்பகல் 3.20 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேருகிறார்கள்.
பின்னர் அவர்கள் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இலங்கை சிறையில் தற்போது ஒருவரும் இல்லை என்றார் ஜெனிபர் சந்திரன்.












Click it and Unblock the Notifications