நின்றுபோன தூதுக்குழுவின் பயணம்
சென்னை:
வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த நெடுமாறன் மறுத்து விட்டதால் தூதுக்குழுவின் பயணம் நிறுத்தப்பட்டு விட்டது என்று நக்கீரன் பத்திரிக்கையாசிரியர்கோபால் கூறினார்.
நடிகர் ராஜ்குமாரை மீட்பது பற்றி சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் ஆறாவது முறையாக பேச்சுவார்த்தை நடத்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர்நெடுமாறன், நக்கீரன் ஆசிரியர் கோபால், பேராசிரியர் கல்யாணி, புதுச்சேரியைச் சேர்ந்த சுகுமாறன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காட்டிற்குப்புறப்பட்டுச் செல்வதாக இருந்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் பேசும் போது நெடுமாறன் காட்டிற்கு செல்வதற்குகடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது நெடுமாறனை தேச விரோதி என்றார்.
சோ.பாலகிருஷ்ணனின் இந்தப் பேச்சுக்கு நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது குறித்துத் தெரிந்து கொண்ட நெடுமாறன், சோ.பாலகிருஷ்ணன்வேண்டுமானால் காட்டுக்குச் சென்று வரட்டும் என்றார். இதேபோல் அவருடன் காட்டுக்குச் செல்வதாக இருந்த, பேராசிரியர் கல்யாணி,சுகுமாறன் ஆகியோர் சோ.பாலகிருஷ்ணனின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் நெடுமாறன் குழுவினர் இனிமேல் காட்டுக்குச் செல்லவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து நக்கீரன் ஆசிரியர் கோபாலும் காட்டுக்குச்செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications