For Daily Alerts
Just In
சட்டசபையில் சி.எஸ்சுக்கு அஞ்சலி
சென்னை:
தமிழக சட்டசபையில் முதுபெரும் காங்கிரஸ் தலைவரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான சி.சுப்ரமணியத்துக்கு புதன்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பின்னர் வீரப்பன் விவகாரத்தால் சட்டசபை முற்பகல் 11 மணிக்குஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை தமிழக சட்டசபை கூடியது. முதலாவதாக மறைந்த சி.சுப்ரமணியத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சுப்ரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, November 8, 2000, 5:30 [IST]