அமெரிக்காவை குழப்பிய புளோரிடா: வென்றது புஷ்ஷா?அல்கோரா?
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியை புளோரிடா மாகாணம் முடிவு செய்ததையடுத்து அம் மாகாணத்தில்மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேர்தலில் தோல்வியுற்ற துணை அதிபர் அல்கோர்கோரியுள்ளார்.
இந்த மாகாணத்தில் வாக்களித்துவிட்டு வந்தவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி அல்கோர் தான்வெற்றி பெறுவார் என பல தொலைக்காட்சிகளும் பத்திரிக்கைகளும் தெரிவித்தன. ஆனால், வாக்குஎண்ணிக்கையில் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவருமே கிட்டத்தட்ட சம பலத்தில் இருந்த நிலையில் புளோரிடாவில் கிடைத்த வெற்றி காரணமாக புஷ்அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கணிப்புகள் வெளியாகின. ஆனால், புளோரிடாவில் மீண்டும் வாக்குஎண்ணிக்கை நடத்த வேண்டும் என கோர் கோரியுள்ளதாகத் தெரிகிறது.
1 சதவீதக்குக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் அல்கோரை புஷ் வென்றுள்ளார்.
இந்த மாகாணத்தில் கிரீன் பாட்டியின் ரால்ப் நாடர் 93,500 வாக்குகள் பெற்றார். இதில் பாதி ஓட்டுகள்அல்கோருக்கு போய்ச் சேர்ந்திருக்க வேண்டியவை. இதன் மூலம் கோரின் வெற்றியை நாடர் கெடுத்துள்ளார்.
புளோரிடாவில் கிடைத்த வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை புஷ் பெற்றுள்ளார். ார் 48 சதவீத வாக்குகளைப்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாயின.
இப்போது மாகாண கவர்னராக உள்ள புஷ் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். இவருக்கும் இப்போது ஆட்சியில்உள்ள ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான துணை அதிபர் அல் கோருக்கும் இடையே தேர்தலில் மிகக்கடுமையான போட்டி நிலவியது.
மொத்தம் 270 எலெக்ட்டோரல் காலேஜ் வாக்குகளை வென்றால் வெற்றி என்ற நிலையில் புஷ் 271வாக்குகளையும் கோர் 249 வாக்குகளையும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
புஷ் 246 வாக்குகளையும் கோர் 249 வாக்குகளையும் வென்றிருந்த நிலையில் புளோரிடா மாகாணத்தில்கிடைக்கும் வாக்கு தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இறுதியில் புளோரிடாபுஷ்சுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அவர் வெற்றி பெற்றார் என அனைத்து கருத்துக் கணிப்பாளர்களும்தெரிவித்தனர்.
இப்போது மறு வாக்கு எண்ணிக்கைக்கு கோர் கோரிக்கை விடுத்திருப்பதால் புஷ்ஷின் வெற்றியும் கோரின்தோல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications