நெடுமாறனைச் சந்திக்க கன்னட நடிகர்-நடிகைகள் முடிவு
சென்னை:
ராஜ்குமாரை மீட்பதற்காக இனிமேல் தூது செல்ல முடியாது என்று மறுத்து விட்ட நெடுமாறனை சந்தித்துப்பேசுவதற்காக கர்நாடக திரைப்படத் துறையினர் சென்னை வருகின்றனர்.
சென்னை வரும் அவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கின்றனர். கன்னட நடிகர் ராஜ்குமாரைமீட்பதற்காக காட்டுக்குச் சென்று வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தூதுக்குழுவினர் புறப்பட்டனர்.
ஆனால் திடீரென்று நெடுமாறன் வர மறுத்துவிட்டதால் தூதுக்குழுவின் 6 வது பயணம் ரத்தானது.
தன்னை ஒரு தேசத்துரோகி என்று தமாகா வினர் சட்டசபையில் குற்றம்சாட்டியதால் ஆத்திரமடைந்தபழ.நெடுமாறன் காட்டுக்குச் செல்ல மறுத்து விட்டார்.
மனிதாபிமான அடிப்படையில் தாம் மேற்கொண்ட முயற்சியை தமாகாவினர் கொச்சைப்படுத்தி விட்டனர் என்றுஅவர் வருத்தம் தெரிவித்தார்.
நெடுமாறனின் இந்த திடீர் முடிவால் ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில் பெரிய முட்டுக்கட்டை விழுந்தது. அதைநீக்குவதற்காக கர்நாடகத் திரைப்படத் துறையினர் சென்னை வருகின்றனர்.
அவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கின்றனர். நெடுமாறனையும் சந்தித்துப் பேசி, மீண்டும்தூதுக்குழுவை காட்டுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.












Click it and Unblock the Notifications