ஆசியாவில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும்
சிங்கப்பூர்:
அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் ஆசியாவில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் சமையல் கேஸ் வாங்குபவர்களின்எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நுகர்வோர்கள் அதிகரித்து வருவதால் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும்உள்ளது.
இவைகளில் இந்தியா மற்றும் சீனாவும் அதிக விலை கொடுத்து பெட்ரோலியம் வாங்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளன. சீனாவில் கடந்த 1999 ம் வருடம் சமையல் கேஸின் தேவை 5.6 மில்லியனாக இருந்தது. இந்தஆண்டு அது அதிகரிக்கும் என்று தெரிகிறது.
இந்தியாவில் அடுத்த 5 வருடங்களுக்கான பெட்ரோலியத் தேவை 3 மில்லியனைத் தொடும் என்று கணக்கீடுகள்தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மோட்டார்- வாகன சட்டப்படி, சமையல் கேஸை, வாகனங்களுக்குப் பயன்படுத்தும்எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்று மசோதா நிறை வேற்றப்பட்டது. இதனாலும் வரும் ஆண்டுகளில்சமையல் கேஸ் வாங்கும் நுகர்வோர் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தைவான் எண்ணெய் சுத்திக்கரிப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், தைவான் நாட்டில் சமையல் கேஸின் தேவைஅதிகரித்து வருகிறது. இதனால் அடுத்த ஆண்டே தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
2001 ம் ஆண்டிற்கு 2.86 மில்லியன் டன்கள் சமையல் கேஸ் தேவைப்படும். இவற்றில் 1 மில்லியன் பொதுவானஉபயோகத்திற்கும், 1.86 மில்லியன் டன் வீட்டு உபயோகத்திற்கும் தேவைப்படும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.