சோனியா பின்னால் அணி திரண்ட தமிழக காங்கிரஸ்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில், தமிழகத்தில் உள்ள அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் சோனியா காந்தியை ஆதரிப்பது என்று முடிவு செய்திருப்பதாக தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
வரும் நவம்பர் 12 ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு சோனியா காந்தியும், ஜிதேந்திர பிரசாத்தும்போட்டியிடுகிறார்கள்.
தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து முடிவு செய்ய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருணாசலம், பிரபு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், மரகதம் சந்திரசேகர், அன்பரசு, அடைக்கலராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தபின் தமிழக காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சோனியா காந்தியை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள 513 பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், 35 மாவட்ட தலைவர்கள் மற்றும் 5 முன்னாள் காங்கிரஸ் தலைவர்களும் ஓட்டுப்போடுவார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தபின் மாநில தலைவர் தேர்தல் நடக்கலாம் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications