For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் தமிழ் எம்.பி.சுட்டுக்கொலை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் தமிழ் எம்.பி. நிமலன் சவுந்தரநாயகம் செவ்வாய்க்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக் கொன்றனர்.

சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் மட்டக்களப்பு தொகுதியில், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக் கட்சி சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்றவர் நிமலன் சவுந்தரநாயகம்.

இவர் கிழக்கு மட்டக்களப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்று கொண்டிருந்த போது, அவரை மர்ம மனிதர்கள் 4 பேர்சுட்டுக் கொன்றனர். கொலையாளிகளும் மோட்டார் சைக்கிளில் வந்துதான் தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் அமைச்சருடன் சென்ற பாதுகாவலர் காயம் அடைந்தார். அவர் உடனடியாக எரவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குஅவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கியால் சுட்ட குற்றவாளிகள் குறித்த விவரம் எதுவும் தெரியவில்லை. ஆனால் சமீப காலமாக இலங்கையில் பல தலைவர்களை புலிகள் கொலைசெய்து வருகின்றனர் என்று ஐக்கிய விடுதலை முன்னணி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X