தீவிரவாதத்தை முறியடிக்க இந்தியா-துருக்கி திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சர்வதேச அளவில் நடக்கும் தீவிரவாதத்தை, இந்தியாவும், துருக்கியும் இணைந்து முறியடிப்பது என இரு நாட்டுப்பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

துருக்கி தேசிய பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளர் கம்ஹர் ஆஸ்பராக் இந்தியா வந்துள்ளார். அவர், இந்தியப்பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளர் சதீஷ் சந்திராவை சந்தித்துப் பேசினார்.

இருவரும், இருநாடுகளிலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடக்கும் தீவிரவாதங்கள், நாட்டு பாதுகாப்புக்குஇடையூறு விளைவுக்கும் தீவிரவாத இயக்கங்கள், நாட்டுப் பாதுகாப்பு, கடத்தல் சம்பவங்கள் ஆகியவை குறித்துவிவாதித்தனர்.

விவாதத்தில், இரு நாடுகளிலும் நடக்கும் தீவிரவாத செயல்களை அவ்வப்போது பரிமாறிக் கொள்ள வேண்டும்என்று முடிவெடுத்தனர்.

மேலும் சர்வதேச அளவில் இந்தியாவிலும், துருக்கியிலும் அதிகரித்து வரும் தீவிரவாத செயல்களை இருநாடுகளும் இணைந்து முறியடிக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.

ஆப்கானிஸ்தானுடன் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் இந்திய,துருக்கி பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

கடந்த மார்ச்- ஏப்ரல் மாதங்களில் துருக்கி பிரதமர் பூலன்ட் எஸிவிட் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம்மேற்கொண்டார். இதையடுத்து இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.

தற்போது, துருக்கி பாதுகாப்பு கவுன்சில் பொதுச்செயலாளர் ஆஸ்பராக்கின் வருகை தீவிரவாதம் மட்டுமின்றி பலவிஷயங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் வகையில் இருந்தது.

தற்போது டெல்லியிலுள்ள ஆஸ்பராக் ஹைதராபாத்திலுள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ. மற்றும் மும்பையிலுள்ள பாபா அணுஆராய்ச்சி மையத்தையும் சென்று பார்க்கவுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+