காங்கிரஸ் தேர்தல் ஒரு கேலிக் கூத்து: பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ராஜ்குமாரை மீட்க நெடுமாறன் செல்வதை குறைகூறுவதா? என்று தமாகாவுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,

நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்கு தூதுவராக அனுப்பப்பட்ட நெடுமாறனை தமாகாவினர் விமர்சித்து உள்ளனர். இதனால் நெடுமாறன் தமாகா தலைவரைதூதராக செல்லட்டும் என்று கூறியுள்ளனர்.

ராஜ்குமாரை மீட்கும் நடவடிக்கைகளை விமர்சிப்பது நல்லதல்ல. ராஜ்குமார் கடத்தப்பட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகிறது. அவரது குடும்பத்தினரும்,கர்நாடக மாநில மக்களும் இதனால் வருத்தத்தில் உள்ளனர்.

ராஜ்குமாரை மீட்பதற்கு மனிதாபிமான முறையில் யார் உதவினாலும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நெடுமாறன் கொள்கைகள் பிடிக்காமல்இருக்கலாம். ஆனாலும் ராஜ்குமார் மீட்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது உதவியை பயன்படுத்துவதில் தவறில்லை.

இந்தப் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பை தொடர்ந்து தமிழக, கர்நாடக அரசுகள் ராஜ்குமாரை மீட்க புது விதிமுறைகளைக் கையாளவேண்டும். எத்தகைய விதிமுறைகள் என்பதை மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும்.

அதற்கு மத்திய அரசு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்யும். மாநில அரசுகளைக் கேட்காமல் மத்திய அரசு இந்தப் பிரச்சனையில் தலையிடாது.உதவி கேட்டால் செய்யத் தயாராக இருக்கிறது.

பாலசிங்கத்தை உடல்நலம் விசாரிக்க சந்தித்தேன் என்று வைகோ கூறியுள்ளார். எனவே இந்த சந்திப்பை பெரிது படுத்தாமல் விட்டுவிட வேண்டும். தமிழ்ஈழத்தை மத்திய அரசு ஆதரிக்காது. அதே நேரம் தனிப்பட்டவர்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிடுவதில் தவறு இல்லை.

தமிழக காங்கிரஸ் கட்சித் தேர்தல் கேலிக் கூத்தாக நடக்கிறது. கீழ் மட்டத்தில் இருந்து தேர்தல் நடத்தாமல் மேல் மட்டத்தில் இருந்து தேர்தலைஆரம்பிக்கிறார்கள். சோனியாவுக்கு தன்னம்பிக்கை இல்லாததையே இது காட்டுகிறது என்றார் அமைச்சர் வெங்கய்யா நாயுடு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+