சீனாவில் நிலநடுக்கம்: உயிர்ச்சேதம் இல்லை
Subscribe to Oneindia Tamil
பீஜிங்:
சீனாவில் உள்ள க்யூன்கை திபெத் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தப் பகுதியில் கடந்த 12 நாட்களில் நடக்கும் 4 வது நிலநடுக்கமாகும் இது.
க்யூன்கை திபெத் பகுதியில் வியாழக்கிழமை காலை 6.45 மணிக்கு 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் வெளியேறி ஓட ஆரம்பித்தனர். வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சேதமடைந்தன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு எதுவும் தெரியவில்லை. இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதற்கு முன்பு அக்டோபர் 29 ம் தேதி5.3 ரிக்டர் அளவிலும், அக்டோபர் 31 ம் தேதி 5.4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications