ஆயுத்த ஆடை ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறக்கிறது திருப்பூர்
திருப்பூர்:
ஐரோப்பிய நாடுகளுக்கு 4 ஆயிரத்து 500 டன் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.
இதில் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடைகளை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்யமுடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்லில் இந்திய ஜவுளித் துறை அமைச்சக அதிகாரிகளுக்கும், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளுக்கும்இடையே ஜவுளி ஏற்றுமதி குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது இந்தியாவிலிருந்து அதிக அளவில் ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்ய அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். ஆனால்கோட்ட முறையில் தான் இந்த ஒதுக்கீடு இருக்கும்.
இந்த ஏற்றுமதியின் அளவு நான்காயிரத்து 500 டன்னாக இருக்கும். இந்தியா முழுவதிலும் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகள் இதன் மூலம்பயனடைய விருக்கின்றன.
இதில் திருப்பூர் பெருமளவு பங்கினைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராகி வருகிறது.
அன்மையில் இங்கு நடந்த கோடைகாலக் கண்காட்சியின் போது ஜவுளித்துறை அமைச்சகச் செயலர் சதூர்வேதி இது குறித்து தெரிவித்திருந்தார். தற்போது இந்தவாய்ப்பு கிடைத்ததில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நவம்பர் 10ம் தேதி முதல் கோட்டா அடிப்படையிலான பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த அடிப்படையில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்றஅடிப்படையில் கோட்டா ஒதுக்கீடு இருக்கும். ஐரோப்பியா நாடுகளுக்கான ஏற்றுமதியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும்பங்கேற்கத் தயாராகிவருகின்றனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் கூறுகையில், டி ஷர்ட்டுகள், பெண்களுக்கான உள்ளாடைகள், ஆகிய ஆடைகளில் திருப்பூர்ஏற்றுமதியாளர்கள் கை தேர்ந்தவர்கள்.
இவர்கள் கூடுதல் ஏற்றுமதி ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யத் தயார் நிலையில் உள்ளனர். இதன் மூலம் ரூ. 200 முதல் ரூ. 250 கோடிரூபாய்க்கான ஆடைகளை ஏற்றுமதி செய்யவுள்ளனர்.
கோட்டா முறையிலான ஒதுக்கீடு இருப்பதால் கூடுதலான ஆடை ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது. தற்போது ஐரோப்பியநாடுகளுக்கு கூடுதலாக ஏற்றுமதி செய்யக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன் என்றார்.
ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதிக் கோட்டா நான்காவது பிரிவின் கீழ் ஒரு கோடியே 40 லட்சம் பீஸ்களும், 5வது பிரிவின் கீழ் 76 ஆயிரம் பீஸ்களும்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்த ஏற்றுமதியைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் திருப்பூர் உள்ளது. எனவே திருப்பூர் மீண்டும் பரபரப்பானநகராமாக உருவாகி வருகிறது.