15 வருடங்களுக்கு பின் தாயுடன் இணைந்த பெண்
ஓரிகன் (அமெரிக்கா):
அமெரிக்காவில் 15 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் சில தினங்களுக்கு முன் நெவாடா மாநிலபோலீசாரின் உதவியுடன் தாயுடன் சேர்ந்தார்.
இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:
போலீசில் உதவி கேட்ட அந்த பெண் தன் பெயர் என்ன என்பது தெரியவில்லை எனவும், ஃபாலன் ஆகஇருக்கலாம் எனவும் கூறியிருக்கிறார். பிறப்பு பதிவேடுகள் போலீசாரால் சோதனையிடப்பட்டதில் ஓரிகனில்1982-ம் ஆண்டு ஃபாலன் மேரி ஹாட்ஜஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது தெரிய வந்தது.
அந்த குழந்தையின் தாய் ஈவ்லீன் ஸ்ட்ரெம்பெல் வெனெட்டா என்ற இடத்தில் இருப்பது தெரிய வந்தததும் தாயும்மகளும் ஞாயிற்றுக் கிழமையன்று பாசம் பொங்க சந்தித்துக் கொண்டனர்.
ஸ்ட்ரெம்பெல் கூறுகையில், இது என் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான நாள் நான் அழுது கொண்டேசிரித்தேன். என் உணர்ச்சிகளை வெளியிட வார்த்தைக ள இல்லை என்றார்.
வாஷிங்டனில் 15 ஆண்டுகளாக தன் செவிலித் தாயுடனும், அவருடைய கணவரோடும் இருந்தது வந்த ஃபாலன்அவர்கள் இவரை விட்டு பிரிந்ததும் போலீசாரின் உதவியுடன் தாயுடன் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications